×

மோடி குறித்து விமர்சனம் செய்த திரிணாமுல் செய்தி தொடர்பாளர் மற்றொரு வழக்கில் கைது

கொல்கத்தா: பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்த   திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே, மற்றொரு வழக்கில் குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்டார். குஜராத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் தொங்கு பாலம் அறுந்து  விழுந்த சம்பவத்தில், பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை   திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே  வெளியிட்டிருந்தார். அதையடுத்து கடந்த 6ம் தேதி குஜராத் சைபர் கிரைம்  போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன்  கிடைத்தது. இந்நிலையில் ‘கிரவுட் ஃபண்டிங்’ மூலம் வசூலிக்கப்பட்ட பணத்தை தவறாக பயன்படுத்திய புகாரின் அடிப்படையில், திரிணாமூல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலேவை குஜராத் போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post மோடி குறித்து விமர்சனம் செய்த திரிணாமுல் செய்தி தொடர்பாளர் மற்றொரு வழக்கில் கைது appeared first on Dinakaran.

Tags : Trinamool ,Modi ,Kolkata ,Trinamool Congress ,Saket Gokhale ,Gujarat ,Dinakaran ,
× RELATED சந்தேஷ்காலியில் வெடிபொருள்...